யாழ்.மாவட்ட பொலிஸாருக்கு 40 ஆட்டோக்கள்!

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்.பிரதம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்ற குறித்த நிகழ்வில்

பிரதமவிருந்தினராக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டு பொலிஸ் நிலையங்களுக்கான முச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.

Advertisement

நாட்டில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி குற்றங்களை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டின் பிரதமர்

மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் நாடு பூராகவும்உள்ள பொலீஸ் நிலையங்களுக்கென

2000 முச்சக்கர வண்டிகள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்திற்கு கையளிக்கப்பட்ட

40 முச்சக்கர வண்டிகளும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *