இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பினர்!

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5 ஆயிரத்து 172 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 61 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 932 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இதுவரையில் 3 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *