மட்டு. வாழைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று (திங்கட்கிழமை) இரவு இராணுவ புலனாய்பு பிரிவினர் கைது செய்ததுடன், முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கோழிக்கடை வீதியில் பயணித்த வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *