அமெரிக்காவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாரை கோடியை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக மூன்று கோடியே ஐம்பது இலட்சத்து 18ஆயிரத்து 600பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை ஆறு இலட்சத்து 24ஆயிரத்து 983பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 266பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 121பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 49இலட்சத்து 87ஆயிரத்து 415பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறாயிரத்து 72பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு கோடியே 94இலட்சத்து ஆறாயிரத்து 602பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *