வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமனம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இந்நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி, கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு இருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், திருகோணமலையில் கடமையாற்றிய குறித்த பெரும்பான்மை இனத்தவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவர் தனது கடமைகளை கடந்தவாரம் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *