வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

<!–

வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்! – Athavan News

நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை முதல் விவசாய தேவை உட்பட வீட்டுத்தேவைக்கும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பெண்கள் மற்றும் வயோதிபர்கள் சிறுவர்கள் என பலரும் மண்ணெண்ணைக்காக காத்திருந்த நிலையில், மின்சார தடை காரணமாக நீண்ட நேரமாக எரிபொருளை வழங்காத நிலை காணப்பட்டதுடன் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையும் காணப்பட்டது.

இதேவேளை, வாகனங்களும் டீசலை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்தபோதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லாத நிலை இன்று காலை காணப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *