
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அரச எதிர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றையதினம் மாலை 3 மணிக்கு தன்னை சந்திக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.