அடுத்த நான்கு நாட்களுக்கான மின்தடை அட்டவணை

இலங்கையில் அமுல்படுத்தப்படும் தினசரி மின்வெட்டுகளின் காலம் எதிர்வரும் நாட்களில் மேலும் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை (05) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் சில முக்கிய இடங்களைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் 6 மணி 30 நிமிட மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.

குறித்த காலப்பகுதியில் கொழும்பின் முக்கியமான பகுதிகளில் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் என PUCSL தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனல் மின் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கல் காரணமாக 6 மணி 30 நிமிட மின்வெட்டுக்கு CEB கோரிக்கை, PUCSL ஆல் ஏப்ரல் 05 முதல் 08 வரை அங்கீகரிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையின் அடிப்படையில்

ABCDEFGHIJKL பகுதிகள் –
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

PQRSTUVW பகுதிகள் –
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

CC1 பகுதி –
காலை 6.00 மணி முதல் 9.30 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *