பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு – 3,139 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 3,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான குற்றச்சாட்டில் மட்டும் 1,355 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 15,292 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது துப்பாக்கி தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 654 நபேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 97 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 638 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *