ரணிலுக்கு முதல் தோல்வி

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று (19) முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒள்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார்.

இன்றைய தினம் (20) நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை, அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாக கருதவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அதேவேளை, அது தொடர்பான வாக்கெடுப்பும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *