பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் இன்று காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகவும் அதேநேரம் மன்னார் மாவட்ட கல்வி வலயங்களில் கல்வி கற்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு விசேடமாக பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *