
முகக்கவசத்தால் மற்றொரு தொற்று!
இலங்கையில் கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்க்கும், கொரோனாத் தொற்றுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போதும், நீண்ட நேரம் முகக்கவசங்களை அணிவதால் கறுப்பு பூஞ்சை நோய் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அவருக்கு மூக்கின் உட்புறத்திலும், ஒரு கண்ணிலும் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் அவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் போன்று பல நோயாளிகள் சிகிச்சை பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஒரே முகக்கவசத்தை அல்லது அழுக்கு முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிந்திருப்பது கறுப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.