
தவறாக விளங்கிய கர்ப்பிணிகள் கருவைக் கலைப்பதற்கு முயற்சி!
கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும்வரை கர்ப்பம் தரிப்பதை ஒருவருடம் தாமதப்படுத்தவேண்டும் என்று அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு மருத்துவர்களை நாட ஆரம்பித்துள்ளனர்
இவ்வாறு மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-:
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மருத்துவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தும்வரை கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடம் தாமதப்படுத்த வேண்டும் என்று அண்மையில் விசேட மருத்துவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்டமையால் கர்ப்பிணித் தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைச் சட்டத்துக்கமைய தாயின் உயிருக்கு ஆபத்தாக இருந்தால் மாத்திரமே கருவைக் கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று உலகுக்கு வந்த புதிய நோயாகும். உலகம் முழுவதும் அதன் செயற்பாடு பற்றிய வரையறுக்கப்பட்ட தரவுகள் மாத்திரமே இன்னமும் உள்ளது. இன்னும் ஒரு வருடத்துக்குள் விஞ்ஞானிகள் அதற்கு புதிய தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க முடியும்.
ஒருவருட கர்ப்பத்தைத் தாமதப்படுத்துவது தாய்க்கும் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நிபுணர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளா மல் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை அல்லது தாய்க்கு கொரோனாத் தொற்றால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளமுடியும் – – என்றார்.