கொரோனாத் தொற்றால் மன்னார் மாவட்டத்தில் 23 பேர் சாவு!

மன்னார் மாவட்டத்தில் தொற்றால் 23 பேர் சாவு பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் தெரி­விப்பு!

மன்­னார் மாவட்­டத்­தில் கொரோனாத் தொற்­றால் 23 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று மாவட்ட பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் த.வினோ­தன் தெரி­வித்­துள்­ளார்.
அவர் நேற்றுமுன்தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்டுள்ள­தா­வது;
மன்­னார் மாவட்­டத்­தில் இது­வரை காலத்­தி­லும் மேற்­கொள்­ளப்­பட்ட பி.சி.ஆர்.பரி­சோ­த­னை­யில் 1966 கொரோ­னாத் தொற்­றா­ளார்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

நேற்­று­முன்­தி­னம் ஒரு­வர் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­ததைத் தொடர்ந்து தற்­போது மன்­னார் மாவட்­டத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 23 ஆக உயர்ந்­துள்­ளது.
அத்­து­டன் நேற்­று­முன்­தி­னம் 6 பேர் தொற்­றா­ளர்­க­ளாக அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர். இவர்­களில் மன்­னார் பொது மருத்­து­வ­ம­னை­யில் 5 நபர்­க­ளும், விடத்­தல்­தீவு மருத்­து­வ­ம­னை­யில் ஒரு­வ­ரும் என 6 பேர் தொற்­றா­ளர்­க­ளாக அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *