நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஆயிரத்து 742 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 495,851 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு ,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11ஆயிரத்து 605 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 427,254 ஆக அதிகரித்துள்ளது.