பிரெஞ்சு ஓபனுக்குப் பின்னர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக சோங்கா அறிவிப்பு !

உலகின் முன்னாள் ஐந்தாவது தரவரிசை வீரரான ஜோ-வில்பிரைட் சோங்கா, இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடருக்கு பின்னர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

18 ஏ.டி.பி. ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள 36 வயதான அவர், 2008 அவுஸ்ரேலிய ஓபன் இறுதிப் போட்டிவரை முன்னேறி நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் இரண்டிலும் இரண்டு முறை அரையிறுதிக்கு பிரெஞ்சு வீரர் சோங்கா முன்னேறியிருந்தார்.

இந்நிலையில் தனது வயதைக் கருத்திற்கொண்டு டென்னிஸில் இருந்து வெளியேறவுள்ளதாக ஜோ-வில்பிரைட் சோங்கா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *