டொலரின் விற்பனை பெறுமதி 321 ரூபா வரை உயர்வு!

மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபாயாகவும் கொள்விலை 310 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 421 ரூபாயாகவும் கொள்விலை 407 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 352 ஆகவும் கொள்விலை 340 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *