பாப்காக் கடற்படை கப்பல்துறையில் எரிபொருள் திருட்டு: விசாரணை ஆரம்பம்!

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கடற்படை ஒப்பந்ததாரர்களான பாப்காக் கடற்படை கப்பல்துறையில் இருந்து டீசல் திருடப்பட்டது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிளைமவுத்தில் உள்ள டெவன்போர்ட் கப்பல்துறையில் இருந்து 250,000 பவுண்டுகள் பெறுமதியான எரிபொருள் திருடப்பட்டதாக தி சன் பத்திரிகையில் வந்த செய்தியைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் தாக்குதல் கப்பலான எச்.எம்.எஸ். புல்வார்க் மீண்டும் பொருத்தப்பட்டபோது டேங்கர் லொரியில் திருடப்பட்ட எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிழல் ஆயுதப் படை அமைச்சர் லூக் போலார்ட், சட்டன் மற்றும் டெவன்போர்ட் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இது ‘அவமானம்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *