நிதி அமைச்சர் அலி சப்ரியே! – அரசு அறிவிப்பு

நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவர் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக, அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான தற்போதைய ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறுகிறது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற வேளை, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *