இலங்கையின் தற்போதைய நிதியமைச்சர் அலி சப்ரியே – அரசாங்கம்

நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.

அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவரே நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *