இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 17 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் இதில் 30 வயதுக்கு குறைவான ஒரு ஆணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.