பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையம்!

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை குறித்த நிலையம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கு மேற்கொள்ளப்படும் அன்ரிஜன் பரிசோதனைகளுக்காக எவ்விதமான கட்டணங்களும் அறிவிடப்படமாட்டாது என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குள் தொழிலுக்காக வருகைத்தருபவர்கள் மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போரும் குறித்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *