வரணியில் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு!

வரணி, குடமியன் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், கப்டன் பவான் (ஐயா) – 99 எனும் வாகன தகர்ப்பு வெடிகுண்டு  என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அதிசக்தி வாய்ந்தவை எனவும் சில நாள்களுக்கு முன்னர் இவை, காட்டுபகுதிக்குள் கொண்டு வந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *