நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பிசிஆர் சோதனையா? விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்..!

முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களின் வருகையின் பின் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பான புதிய திட்டமானது அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும், பிசிஆர் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருப்பின் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்கள் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *