ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தினரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால், பல ஆபத்தான பேரழிவுகள் ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தொடர்ந்து அபாயகரமான சிவப்பு மண்டலமாக அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், சிவப்பு மண்டலத்தில் இருந்து பசுமை மண்டலத்திற்கு நாட்டை கொண்டு வருவதே குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, ஒக்ஸிஜனின் தேவை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இவை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தியதன் ஆரம்பம் மட்டுமே என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *