கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

நாட்டில் நேற்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 271 ஆக பதிவாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 98 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 336 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 28 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *