மின்சார விநியோகத்தில் சிக்கல் ஏற்படும்- மின்சக்தி அமைச்சு

இலங்கையில் அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமையினாலே இந்த நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மக்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதனால், அடுத்த மாதத்தின் பின்னர் மின்சாரம் வழங்குவதற்கு சிக்கல் நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *