விடுதலை புலிகளை விசாரணைக்கு உட்படுத்துவது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாகும்- சித்தார்த்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோருவதானது, ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச ரீதியாகவோ கொள்கை ரீதியாகவோ எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். நாம் இதில் மிக தெளிவாக இருக்கிறோம்.

விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்றாலே, அவர்கள் போராடியது பிழையென்பதுதான் இவர்களின் நிலைப்பாடு.

இது இயக்கங்களின் போராட்டமல்ல. ஒரு சிலரை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தனர். அது மக்களின் போராட்டம். அதிலே சிறுசிறு தவறுகள் நடந்திருக்கலாம்.

நாம் கூட்டமைப்பை விட்டு வௌியேறுவதாக எப்பொழுதும் சொன்னதில்லை. தமிழ் மக்களின் பலத்தை உடைக்கும் நிலைப்பாட்டை நாம் எடுக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *