
இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை – வியாழேந்திரன் இந்தியாவில் பேச்சு!
-சீலாமுனை நிருபர் –
இலங்கை மற்றும் இந்தியா நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கணாணும் வகையிலும், நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும்இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிப்பது பற்றிய பேச்சுவார்த்தையை புதுச்சேரிமுதலமைச்சர்என்.ரங்கசாமியுடன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கா, சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்பங்கேற்றிருந்ததாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மேலும், இந்தியா சென்றுள்ள இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிராமிய அபிவிருத்தி, மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு தொடர்பான விசேட பல கலந்துரையாடல்களில் இன்றைய தினம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





