மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவரும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளத்துச்சேனையில் அதிகளவான மண் அகழப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெறுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேச மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இடம்பெயரக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ்வாறு அகழப்படும் மண் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது எனவும் இதற்கு பின், அரசாங்கம் சார்ந்த அரசியல்வாதிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு யார் அனுமதி வழங்கியது என்பது தெரியாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சி.சந்திரகாந்தன் மற்றும் இராஜங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மண் மாபியாக்களின் கூடாராமா மாறிவரும் மட்டக்களப்பு மண் வளத்தை பாதுகாக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இந்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கவனம் எடுத்து உடனடியாக இதை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *