இன்றும் நுவரெலியாவில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!

நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 09 மணியளவில் நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோ ஹோம் கோட்டா, கோட்டா வெளியேறு, குடும்ப ஆட்சி வேண்டாம்” போன்ற பல கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் இவ்வாறு பொறுக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *