
கொழும்பு, ஏப் 09
தற்போது அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதுடன் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் தொலைபேசிகளை முடக்கும் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.