
இம்மாதம் 265,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதியின் எரிபொருள் கையிருப்பு பராமரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக CPC இன் தலைவரான சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
தற்போது, CPC யின் சேமிப்பில் சுமார் 73,000 மெட்ரிக் தொன் எரிபொருள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்வெட்டு காரணமாக மக்கள் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாலும், மக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக பதுக்கி வைத்திருப்பதாலும், இந்த நாட்களில் எரிபொருள் நுகர்வு வேகமாக அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை விட பீப்பாய்களே காணப்படுகின்றன.
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தேவையில்லாமல் எரிபொருளை சேகரிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.