பொதுமக்கள் படும் சிக்கல்களுக்கு அரச ரீதியில் வருந்துகிறேன்! திஸாநாயக்க

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்கள் படும் சிக்கல்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் வருந்துவதாக கூறிய அவர், மக்களின் குறைகளை உணர்ந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பாக எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்று மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *