
கொழும்பு, ஏப்09
அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை பெற்றுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு அமெரிக்காவில் உள்ள அவர்களது சொத்துக்களை பெற்றுக்கொள்ளாமல் அவர்களை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல விடமாட்டோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.