
மானிப்பாய் – ஆனைக்கோட்டை முதலாம் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் அவரது மனைவி அவரின் அறையை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
திருச்செல்வன் நியூட்டன் (வயது 33) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.