
இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் டீசல் தட்டுப்பாடும் ஒன்றாக காணப்படுகிறது.
இதனால் அன்றாடம் உழைத்து வாழும் விவசாய அறுவடை சாரதிகள், டெக்டர் இயந்திர சாரதிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல இடங்களிலும் இவ்வாறான டீசல் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்தே டீசல் பெற வேண்டியதுடன் சில வேலை பல மணி நேரம் காத்திருந்து டீசலின்மை ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெருங்கையுடன் வீடு செல்ல வேண்டியுள்ளது, இதன் காரணமாக அன்றைய தினம் தொழில் இன்மை பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் பொருட்களின் விலை அதிகரிப்பாலும் கஷ்டங்களுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.