தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்று காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 75 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சந்தேகநபர், தர்மபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.






