இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதலை பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் – ஜனாதிபதி!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இது அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, இந்தப் பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு நினைவூட்ட விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *