இராஜாங்க அமைச்சரின் செயல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு

சிறை நிர்வாகம் மற்றும் கைதி மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று வெள்ளிகிழமை நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக இருப்பதோடு, பொதுப் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே கடந்த 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *