தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து இன்று புதன்கிழமை காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதியே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply