தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் – ஸ்டாலின்

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் கொண்டாடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும். அறநெறிகள் தவறாமல் வாழந்திட வேண்டும் என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன.

நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்கவேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள் அதன்வழி நின்று அடி பிறழாமல் பின்பற்றி இந்த பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

இந்த பண்டிகையை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி முறையாக கொண்டாட வேண்டும் என வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *