![](https://athavannews.com/wp-content/uploads/2021/07/attack-2.jpg)
யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மகனைத் தேடி வந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.