
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு என சந்தேகிக்கப்படும் மூவரின் சொத்துகளை இந்திய அரசாங்கம் முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபேஷன், ரமேஷ் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய 3 பேருக்குச் சொந்தமான 6 காணிகள், 12 வாகனங்கள் உள்ளிட்ட 3.59 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு பிரிவால் குறித்த மூவரும் கடந்த ஆண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.