போராட்டங்கள் பயனளிக்காது: முத்தையா முரளிதரன்

கொழும்பு, ஏப் 11

நாட்டின் நெருக்கடிக்கு போராட்டங்களைச் செய்வதில் எவ்வித பயனுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள். இதனால், வருமான இழப்பு ஏற்படும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன்மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும் என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தும் என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *