அனுமதியின்றி இரவிரவாக கட்டப்படும் இஸ்லாமிய கலாசார மண்டப மதில்கள்! வவுனியா மக்கள் விசனம்

வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொரவப் பொத்தானை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய காலசார மண்டபத்தின் சுற்று மதில் நகரசபையின் அனுமதியின்றி இரவிவராவாக அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொரவப்பொத்தானை வீதியில் இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைந்துள்ளது.

அது அருகில் இருக்கும் வவுனியா குளத்தின் நீரேந்துப் பகுதிக்கு செல்லும் வாய்காலை அண்மித்ததாக அமைந்துள்ளது.

குறித்த கலாசார மண்டபதிற்கான சுற்று மதில்களை அப் பகுதியில் கழிவு நீர் வடிந்து செல்லும் வாய்கால் ஊடாக அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மதில் கட்டுமாண நடவடிக்கைக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்காத நிலையில், புனித நோன்புக் காலத்தில் இரவிரவாக குறித்த கட்டுமாணப் பணிகள் இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களும் ஒற்றுமையாக காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் முறையான அனுமதியின்றி இரவிரவாக ஏனைய சமூக இளைஞர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் நோன்புக் காலத்தில் இஸ்லாமிய கலாசார நிலைய நிர்வாகத்தினர் இவ்வாறு கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டு நடந்து கொள்ளும் முறை குறித்து இளைஞர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இதற்கு எதிராக நகரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *