யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில், இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையாக இடம்பெறுள்ளது.
எனினும்,இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







