இலங்கையில் மிக விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்துள்ளது என பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் அத்துல சேனாரத்ன வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கையில் பதுளை, கண்டி, மடுல்சீமை, லுணுகம்வெஹர, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதுதொடர்பில், நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுக்கமைய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனால், மேல் மாகாணத்தில் நிலநடுக்கம் உணரும் கருவி பொருத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





