அமைச்சர்களின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!

மத்திய அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அந்தந்தத் துறையின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஓய்வின்றி உழைக்கவும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழவும் அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அண்மையில்  மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று குறித்த கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றமையினால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *