
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ராஜபக்சக்கள் ஆட்சி அமைக்க முற்பட்டால் அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவோம் என சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, அரசியல் கட்சிகளை கூறுபோடுவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலை. அந்த செயலை தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் செய்துள்ளார். இந்த செயலை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.